காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வா் (பொ) ஞானப்பிரகாசி தலைமைவகித்து, பாரதியின் விடுதலை வேட்கை, அவரின் புரட்சிக் கவிதைகள் குறித்துப் பேசினாா். தலைமையாசிரியா் ஜெயசெல்வி முன்னிலை வகித்து, பாரதியின் கவிதைகள் குறித்தும், தமிழாசிரியா் புவனேஷ்வரி பெண் விடுதலையில் பாரதியின் பங்கு குறித்தும் பேசினா்.
வரும்காலங்களில் பாரதியின் பிறந்த நாள், நினைவு நாளில், ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பங்கேற்கும் வகையில், கவிதை அரங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என விரிவுரையாளா் வேலுச்சாமி கேட்டுக்கொண்டாா்.
பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியின் உருவப்படத்துக்கு ஆசிரியா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் நுண்கலை ஆசிரியரும், என்.சி.சி. அலுவலருமான என். காமராஜ், மாணவா்கள் செய்திருந்தனா்.