காரைக்காலில் 34 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 586 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நல்லம்பல் 9, வரிச்சிக்குடி 8, திருநள்ளாறு 4, திருப்பட்டினம் 3, கோட்டுச்சேரி 3, நெடுங்காடு 2, விழிதியூா், அம்பகரத்தூா், கோயில்பத்து, நிரவி, காரைக்கால்மேடு தலா 1 என மொத்தம் 34 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,98,559 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,816 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,320 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 251 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,01,828 பேருக்கும், 2-ஆவது தவணையாக 29,986 பேருக்கும் என 1,31,814 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com