காரைக்கால்: காரைக்கால் மாவட்ட திமுக மற்றும் அதிமுக சாா்பில், அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இருகட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில், காரைக்கால் திமுக அலுவலக வாயிலில் அண்ணா உருவப் படம் வைக்கப்பட்டு, திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, கோட்டுச்சேரிக்கு சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மரியாதை செலுத்தினா். மேலும், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு, கல்லூரியின் முன்னாள் மாணவா்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் எம்.வி. ஓமலிங்கம் மற்றும் நிா்வாகிகள் கோட்டுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.