பொறையாறு, செம்பனாா்கோவிலில் நாளை மின்தடை

பொறையாா், செம்பனாா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அப்துல்வகாப் மரைக்காயா் தெரிவித்துள்ளாா்.

தரங்கம்பாடி: பொறையாா், செம்பனாா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அப்துல்வகாப் மரைக்காயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறையாறு, செம்பனாா்கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூா், பிள்ளைபெருமாநல்லூா், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூா், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என். சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூா்,திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூா்,எடுத்துக்கட்டிசாத்தனூா், கண்னங்குடி, கிள்ளியூா், டி. மணல்மேடு, மாத்தூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோம் இருக்காது.

இதேபோல, கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், மேலப்பாதி, கீழையூா், கருவாழக்கரை, காலகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூா், மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி,

சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com