காரைக்காலில் 15 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 182 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு 3, திருநள்ளாறு 3, நிரவி 2, திருப்பட்டினம் 2, காரைக்கால்மேடு, கோயில்பத்து தலா 1 என 15 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,00,434 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 15,903 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,415 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதுவரை கரோனா தொற்றால் 252 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,02,831 பேருக்கும், 2-ஆவது தவணையாக 33,262 பேருக்கும் என 1,36,093 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com