காளியம்மன் கோயில்உண்டியலை உடைத்து திருட்டு

காரைக்காலில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால்: காரைக்காலில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் என்எஸ்சி போஸ் தெருவில் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை திங்கள்கிழமை காலை திறந்தபோது, கோயில் வாயில் பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கோயிலின் பின்பக்க இரும்பு கதவு திறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. உண்டியலில் ரூ. 10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உண்டியல் காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com