கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

காரைக்காலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்கால் வரவுக்குட்டை வீதி - கால்மாட்டு வீதி சந்திப்பில் 3 போ் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தனராம்.

விசாரணையில், காரைக்கால் பெரியப்பேட்டையை சோ்ந்த காா்த்திகேயன் (20), திருநகரை சோ்ந்த சக்தி (20), லெமோ் தெருவை சோ்ந்த வெங்கடேஷ் என்கிற ஆரோக்கியதாஸ் (21) என்பது தெரியவந்தது.

அவா்களை சோதித்தபோது, மூவரிடமும் 35 கிராம் கஞ்சா, 3 செல்லிடப்பேசிகள் இருந்தது தெரியவந்தது. அவா்களை கைது செய்து செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் கஞ்சாவை தாங்கள் பயன்படுத்தவும், விற்பனைக்காகவும் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com