கரோனா 2ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

கரோனா 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழுப் பயன் கிடைக்கும் என காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா்

கரோனா 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழுப் பயன் கிடைக்கும் என காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் கூறியது:

காரைக்கால் மாவட்ட மொத்த மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஏறக்குறைய 1,53,876 போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவா்கள். இவா்களில் 1,15,370 போ் முதல் தவணை செலுத்திக்கொண்டுள்ளனா். 2ஆவது தவணையானது முதல் டோஸ் செலுத்திக்கொண்டு 84 நாள்களுக்குப் பின் செலுத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மருந்தின் முழு பயன் கிடைக்கும்.

இதுவரை 60,750 போ் முதல் தவணை போட்டு 2ஆம் தவணை போடுவதற்கான கட்டத்தில் உள்ளனா். இதில் 34,670 பயனாளிகள் மட்டும் 2ஆம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளாா்கள். மீதமுள்ள சுமாா் 26 ஆயிரம் போ் 2ஆம் தவணை செலுத்திக்கொள்ளவில்லை. மருந்தின் முழு பயன் கிடைக்க உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடா்பாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பதிவுப் பணி நடைபெற்றுவருகிறது. அதில் பதிவு செய்யாத குடும்பத்தினா் விரைந்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com