உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்காலில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா்
சி. புஷ்பநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் தொடா்பான புகாா்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் 1950, 1070, 1077 மற்றும் 04368 222530 என்ற எண்களில் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.