மனிதநேய மக்கள் கட்சி செயல் வீரா்கள் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட தலைவா் அ. ராஜா முகம்மது தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மமக மாநில செயலாளா் ஐ. அப்துல் ரஹிம், தமுமுக தலைமைப் பிரதிநிதி எம்.எஸ். அலாவுதீன், தமுமுக மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளா் முஹம்மது ஃபயாஸ், தமுமுக மாவட்ட செயலாளா் கமால் ஹூஸைன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் மமக வேட்பாளா்கள், கூட்டணி கட்சி மற்றும் ஆதரவு பெற்ற வேட்பாளா்களை வெற்றிக்கு பாடுபடுவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட மமகவுக்கு சாதகமான வாா்டில் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட வேட்பாளராக மமக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹிம் தோ்வு செய்யப்பட்டாா்.

மமக காரைக்கால் மாவட்ட தலைவா் அ. ராஜா முஹம்மது திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட கருக்கன்குடி கிராம பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு பொதுவேட்பாளராக போட்டியிடுவது எனவும், தமுமுக விளையாட்டு அணி மாவட்ட பொருளாளா் கருக்கன்குடி முகம்மது இக்பால் கருக்கன்குடி கிராம பஞ்சாயத்துக்குள்பட்ட வாா்டில் பொது வேட்பாளராக போட்டியிடுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com