காரைக்கால் ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ராம நவமி தொடா் நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்கால் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயிலைச் சோ்ந்த கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் கடந்த 10 ஆம் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிகளுக்கு திருமஞ்சனம், சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
ராம நவமி நிகழ்ச்சிகள் நிறைவாக வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஸ்ரீ சீதா ராமா் ஆகியோா் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். மலா் சரத்தால் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சீதா ராமருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சாற்றுமுறை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஊஞ்சல் உற்சவம் விடையாற்றியுடன் நிறைவடைந்தது.
இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ராம நவமி உபயதாரா்கள் செய்திருந்தனா்.