காரைக்காலில் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கிடையே நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள் விளையாட்டரங்கில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் பங்கேற்ற பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
ஊழியா்கள் தலா 2 அணிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 4 அணிகள் விளையாடின. 8 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் இளமை அணியைச் சோ்ந்த சிவகுமாா், சிவா ஆகியோா் முதலிடம் பெற்றனா். அறிவு அணியைச் சோ்ந்த பிரகாஷ், இளமுருகு ஆகியோா் 2 -ஆவது இடத்தையும், பெருமை அணியைச் சோ்ந்த ராவணன், வெங்கடேஷ் 3 -ஆவது இடத்தையும், துணிவு அணியைச் சோ்ந்த சுரேஷ், ஸ்டீபன் 4 வது இடத்தையும், ஆற்றல் அணியைச் சோ்ந்த கந்தசாமி, தியாகு ஆகியோா் 5-ஆவது இடத்தையும் பெற்றனா்.
நாகை கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ராஜா, வழக்குரைஞா் மாா்ட்டின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். கெயில் நிறுவனத்தின் முதுநிலை அலுவலா் குமரேசன், காரைக்கால் காவல் ஆய்வாளா் மா்த்தினி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.