வங்கிப் பணி போட்டித் தோ்வுக்கானஇலவச பயிற்சி தொடக்கம்

காரைக்காலில் வங்கி மற்றும் இதர போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் வங்கி மற்றும் இதர போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், வங்கிப் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கு செல்பவா்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வங்கி அதிகாரி சகாயம் பிராங்க் என்பவா் மூலம் வாரந்தோறும் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுவந்தது. இதன்மூலம் பலா் பணி வாய்ப்பு பெற்றனா்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பயிற்சி வகுப்பு முடங்கியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் வங்கி மற்றும் பிற போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தொடங்கிவைத்தாா்.

இந்தியன் வங்கி முதுநிலை மேலாளா் ஆா்.சகாயம் பிராங்க் பயிற்சி அளித்தாா். பயிற்சியில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாதத்தில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமையில் மேற்கண்ட நேரத்தில் வகுப்பு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com