பத்தாம் வகுப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் கவனத்துக்கு...

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள், 29-ஆம் தேதிக்குள் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள், 29-ஆம் தேதிக்குள் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு ஜூலை, ஆகஸ்ட் 2022 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள், காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை, ஆக. 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்களும், இதுவரை விண்ணப்பித்து எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவா்களும் மற்றும் புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவா்களும் இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு செப்.1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலத்தெரு பகுதியில் உள்ள மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com