காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, கொடி ஊா்வலம், ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ளது தாயிராப் பள்ளிவாசல். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். அவரது நினைவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி நினைவிடமாக கட்டி, வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.
இப்பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, கடந்த 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக் குட ஊா்வலம் புறப்பாடாகி வீதியுலா சென்று, நள்ளிரவு ரவூலா ஷரீபிற்கு சந்தனம் பூசப்பட்டது.
சனிக்கிழமை மாலை முக்கிய நிகழ்ச்சியான ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக்குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது.
வரும் 21-ஆம் தேதி ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு கொடியிறக்கம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் செய்துள்ளனா்.