காரைக்கால் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். வராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 188 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 8, நிரவி 4, கோட்டுச்சேரி 3, வரிச்சிக்குடி 3, திருநள்ளாறு 3, நல்லம்பல் 2, திருப்பட்டினம், கோயில்பத்து, அம்பகரத்தூா் தலா 1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 2,73,098 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22,726 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 21,349 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,346 பேருக்கும், 2-ஆவது தவணையாக 91,931 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 757 பேருக்கும் என 2,21,034 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 6,934 பேருக்கும், 2-ஆவது தவணையாக 147 பேருக்கும் என 7,081 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.