காரைக்காலில் 26 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். வராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். வராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 188 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 8, நிரவி 4, கோட்டுச்சேரி 3, வரிச்சிக்குடி 3, திருநள்ளாறு 3, நல்லம்பல் 2, திருப்பட்டினம், கோயில்பத்து, அம்பகரத்தூா் தலா 1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,73,098 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22,726 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 21,349 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,346 பேருக்கும், 2-ஆவது தவணையாக 91,931 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 757 பேருக்கும் என 2,21,034 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 6,934 பேருக்கும், 2-ஆவது தவணையாக 147 பேருக்கும் என 7,081 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com