காரைக்கால் மாவட்டத்தில் 3-ஆவது தவணை கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை (ஜன. 10) முதல் செலுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் 3-ஆவது தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா் டோஸ்) திங்கள்கிழமை முதல் சுகாதார ஊழியா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோா் ஆகியோருக்கு காரைக்காலில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் செலுத்தப்படும்.
இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு 36 வாரங்கள் அல்லது 9 மாதங்களான பிறகே 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயனாளா்கள் தங்களுடைய அடையாள அட்டை மற்றும் கைப்பேசி எண் அல்லது ஆதாா் அட்டையை கொண்டுவரவேண்டும். இந்த வாய்ப்பை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.