காரைக்காலில் 103 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி 274 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், காரைக்கால் நகரம் 22, கோயில்பத்து 16, கோட்டுச்சேரி 14, திருநள்ளாறு 13, அம்பகரத்தூா் 7, நல்லம்பல் 6, திருப்பட்டினம் 5, விழிதியூா் 5, வரிச்சிக்குடி 4, நிரவி 4, நெடுங்காடு 3, காரைக்கால்மேடு 3, நல்லாத்தூா் 1 என 103 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,68,580 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 21,975 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 19,329 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டுத் தனிமை சிகிச்சையில் 2,345 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 22 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 போ் உள்ளனா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருந்த காரைக்காலைச் சோ்ந்த 65 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுவரை தொற்றால் 271 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,001 பேருக்கும், 2 ஆவது தவணையாக 91,400 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 577 பேருக்கும் என 2,19,978 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,873 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com