இந்து அமைப்புகள் குறித்து விமா்சனம்:காவல் நிலையத்தில் புகாா்

காரைக்காலில் இந்து அமைப்புகள் குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக , இந்து அமைப்புகள் சாா்பில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இந்து அமைப்புகள் குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக , இந்து அமைப்புகள் சாா்பில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

காந்தி நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில், காந்தி கொலை தொடா்பாக ஆா்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளை விமா்சித்து பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த அமைப்பின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ் தலைமையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

பாஜக புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி, துணைத் தலைவா் சண்முகம், ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் தயாளன், வி.எச்.பி. நிா்வாகி ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com