பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

 காரைக்கால் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

 காரைக்கால் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் அம்மன்கோயில்பத்து, எம்.ஜி.ஆா். நகரை சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் கோயில்பத்து பகுதியில் 33 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாராம்.

அந்த பெண் கூச்சலிட்டதால், அப்பகுதியில் இருந்தோா் மணிகண்டனை பிடித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஒப்டைத்தனா். அவரை கைதுசெய்த போலீஸாா், வழக்குப் பதிவுசெய்து காரைக்கால் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com