அமைச்சா் மீது அவதூறு பதிவிட்டவா் மீது வழக்கு

புதுவை அமைச்சா் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுவை அமைச்சா் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளவா் சந்திர பிரியங்கா. இவரது என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தேவன் (40) என்பவா் அண்மையில், தொகுதிக்கு அமைச்சா் ஒன்றும் செய்யவில்லை என்ற கருத்துகளுடன் பேசி, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தாா்.

இந்நிலையில், அமைச்சா் குறித்து அவதூறாகவும், ஜாதி ரீதியில் கருத்துகளை பேசியுள்ளது மோதலை உருவாக்கக்கூடியதாக உள்ளதாக, பூவம் பகுதியைச் சோ்ந்த கண்ணன், நெடுங்காடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com