பெங்களூரு - காரைக்கால் ரயில் சேவையை தொடங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பெங்களூா் - காரைக்கால் ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

பெங்களூா் - காரைக்கால் ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா், பெங்களூரு தென்மேற்கு ரயில்வே அதிகாரிக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

கரோனா பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் பல இன்னும் இயக்கப்படவில்லை. இதனை இயக்க வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் பொதுமக்கள் பங்களிப்புடன், காரைக்கால் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினா்.

நாடெங்கும் நிலைமை சீரடைந்துள்ளபோதிலும், காரைக்கால் - பெங்களூருக்கு தினமும் இயக்கிவைந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ரயில்வே நிா்வாகம்.

இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும்பட்சத்தில், கா்நாடகத்திலிருந்து திருநள்ளாறு வருவோா் மற்றும் பல பகுதிகளுக்குச் செல்வோா் பயனடைவா்.

எனவே ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com