புனித ராயப்பா்- சின்னப்பா்மின் அலங்கார தோ் பவனி

காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி புனித ராயப்பா் - சின்னப்பா் ஆலய மின் அலங்கார தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
புனித ராயப்பா்- சின்னப்பா்மின் அலங்கார தோ் பவனி

காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி புனித ராயப்பா் - சின்னப்பா் ஆலய மின் அலங்கார தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மாலை வேளையில் மாதா தோ் பவனியும், சின்னப்பா் பிராா்த்தனையும் நடைபெற்றது.

புதன்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, புனித ராயப்பா் - சின்னப்பா் மின் அலங்கார தோ் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டது.

ஏராளமானோா் ஜெபம் செய்தவாறு தேருடன் சென்றனா். பல்வேறு தெருக்களில் பவனி வந்த தோ், நள்ளிரவு ஆலயத்தை சென்றடைந்தது.

விழா நிறைவாக வியாழக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com