காரைக்கால் கைலாசநாதா்கோயிலில் நாளை தெப்போத்ஸவம்

 காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது.

 காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், தெப்ப உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்காக அம்மையாா் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சனிக்கிழமை முதல் தெப்பத்துக்கு அலங்காரம் செய்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கைலாசநாதருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமிகள் வீதியுலா புறப்பாடாகி, பின்னா் தெப்பத்துக்கு எழுந்தருளுவா். குளத்தில் 3 முறை தெப்பம், வேதபாராயணம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளுடன் சுற்றிவரும். ஏற்பாடுகளை உபயதாரா்கள் உதவியுடன் கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com