காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 12 ஆம் தேதி 77 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், வரிச்சிக்குடியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
கரோனா தொற்றாளருடன் தொடா்புடையோரை கண்டறிந்து பரிசோதிக்கும் பணியும், கரோனா தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்துவருகிறது.