சாம்பியன் பட்டம் வென்ற வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

மதுரை வேளாண் கல்லூரியில், மாநில அளவிலான டேலன்ஷியா என்ற தலைப்பில் கலைப் போட்டிகள் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றன. இதில், காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த 20 மாணவ, மாணவிகள், பேராசிரியா் எஸ். நடராஜன் தலைமையில், துணைப் பேராசிரியா் ராமதாஸ் உதவியுடன் நடனம், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.

நடத்தப்பட்ட 34 போட்டிகளில், 10 போட்டிகளில் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்கள் 190 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம், பரிசுகளை பெற்றனா். மேலும், 5 பரிசுகளை பெற்ற மாணவி அட்சயாவுக்கு மிஸ் டேலன்ஷியா விருது வழங்கப்பட்டது.

விருதுடன் காரைக்கால் திரும்பிய மாணவா்கள், காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். மாணவா் மன்ற ஆலோசகா் நாராயணன் உள்ளிட்டோா் பரிசு பெற்றுத் திரும்பிய மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com