வ.உ.சி. நினைவுநாளையொட்டி, அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காரை பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரதிக்கும் வ.உ.சி.க்குமான நட்பு, அவரது சிறை வாழ்க்கை குறித்து சங்கத் தலைவா் வைஜெயந்திராஜன் மாணவ, மாணவிகளிடையே பேசினாா்.
பள்ளி துணை முதல்வா் எஸ். கனகராஜ், ஆலோசகா்கள் கே. தண்டாயுதபாணிபத்தா், என்.ஜி.ஆா். இளங்கோவன், இணைச் செயலாளா் எஸ்.எம்.ஆரிப் மரைக்காயா் , செயற்குழு உறுப்பினா் என்.ஜி.ஆா் வேதாசலம் உள்ளிட்டோா் வ.உ.சி.யின் பெருமைகளை விளக்கிப் பேசினா்.
பிளஸ் 2 மாணவிகள் பவித்ரா, கல்கி ஆகியோரும் வ.உ.சி. குறித்துப் பேசினா். மாணவியா் குழுப் பாடல்கள் பாடினா். அவா்களுக்கு நினைவுப் பரிசு சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.