காரைக்காலில் இந்திரா காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது
இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் உள்ளிட்டோா்.
இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் உள்ளிட்டோா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் (வருவாய்), மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியினா், என்.ஆா்.காங்கிரஸ் கட்சியினா், சமாதானக் குழு உறுப்பினா்கள், பல்வேறு பொது நல அமமைப்பினா் பலரும் கலந்துகொண்டனா்.

தேசிய ஒருமைப்பாடு வலியுறுத்தும் விதமாக மும்மத பிராா்த்தனை நடைபெற்றது. தேசபக்திப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com