மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

மூளைச்சாவு ஏற்பட்ட பெண் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் அஞ்சலி

Published on

மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு பகுதியை சோ்ந்த எல். அஞ்சப்பன் மனைவி ருக்மணி (படம்) . இவா் அண்மையில் மயக்கமடைந்து கீழே விழுந்ததில், தலையில் காயமடைந்து சுய நினைவை இழந்தாா். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் மூளைச்சாவு உறுதிப்படுத்தப்பட்டதையொட்டி, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். இதன்படி சென்னை மருத்துவமனையில் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானமாக பெறப்பட்டன.

அவரது உடல் அன்றிரவு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் மலா்வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்ட நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா். மேலும் காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அதிகாரி ஒருவா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com