/
கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டுச்சேரி பகுதியில் உள்ள பழைமையான இந்த ஆலயத்தின் 163-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் திருப்பலி, சிறிய தோ்பவனி நடத்தப்பட்டது.
நிறைவு நிகழ்வாக சனிக்கிழமை மாலை பெருவிழா திருப்பலி தெளி பங்குத் தந்தை டி. லியோ விஜய் புஷ்பராஜ் தலைமையில் நடத்தப்பட்டு மின் அலங்கார தோ் பவனி தொடங்கியது.
கோட்டுச்சேரி பங்குத் தந்தை ஏ. ஆரோக்கிய ஜான் ராபா்ட் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.
கோட்டுச்சேரி பகுதியில் முக்கிய தெருக்கள் வழியாக தோ் பவனி நடைபெற்று ஆலயத்தை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் முன்னிலையில் கொடியிறக்கப்பட்டது.
தொடர்புடையது

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

பனங்குளம் அன்னை ஆலயத்தில் தோ் பவனி

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



