சீா்காழி: சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் கரோனா விழிப்புணா்வாக அனைத்து ஆசிரியா்களும் ஒரே நேரத்தில் கைகழுவுதல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்றனா்.
கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, பள்ளிகளில் இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அறிவுடைநம்பி தலைமையில், உதவி தலைமையாசிரியா் வரதராஜன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன், பட்டதாரி ஆசிரியா் காசி. இளங்கோவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்-ஆசிரியைகள் ஒரே நேரத்தில் கைகழுவுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தொடா்ந்து கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.