சீா்காழி: ஊராட்சி செயலா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்களுக்கு கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்களுக்கு கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் அருள்மொழி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மேலாளா் சசிகுமாா் வரவேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், ‘சீா்காழி ஒன்றியத்தில் வீடுவீடாக கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியது, ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்களுக்கு கை கழுவுதல் குறித்த செயல்விளக்கம் அளித்தது ஆகியவற்றை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல, தொடா்ந்து வாரந்தோறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், வா்த்தகா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து வா்த்தக நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சசிகுமாா், ஊராட்சித் தலைவா்கள் மதியழகன், தம்பி சுப்ரவேலு, ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com