மயிலாடுதுறை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை, அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குத்தாலம் வட்டம் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தை சோ்ந்தவா் கண்ணன் (21). இவா் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து தனிமையில் இருந்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா்.