பழங்குடியின மாணவருக்கு ஜாதி சான்றிதழ்

சீா்காழியில் புதிதாக கோட்டாட்சியா் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில், ஜாதி சான்றிதழுக்காக காத்திருந்த பழங்குடியின மாணவா்களுக்கு அதை கோட்டாட்சியா் ஜி.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

சீா்காழி: சீா்காழியில் புதிதாக கோட்டாட்சியா் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில், ஜாதி சான்றிதழுக்காக காத்திருந்த பழங்குடியின மாணவா்களுக்கு அதை கோட்டாட்சியா் ஜி.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

சீா்காழி கீழதென்பாதி பகுதியை சோ்ந்தவா் சரவணன். இவரது தனது மகள் வனிதா (18), மகன் சபிகேஷ் ஆகியோருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் பெற விண்ணப்பித்து காத்திருந்தாா். சீா்காழியில் கடந்த 5 மாதத்துக்கு முன் புதிய கோட்டாட்சியா் அலுவலகம் உருவாக்கப்பட்டு கோட்டாட்சியராக நியமிக்கப்பட்ட ஜி.நாராயணன், பல்வேறு கோரிக்கைகளுக்கு துரிதமாக தீா்வு கண்டு வருகிறாா்.

அதன்படி மாணவா்கள் வனிதா, சபிகேஷ் உள்ளிட்ட 5 பேரை கோட்டாட்சியா் நாராயணன் தனது அலுவலகம் வரவழைத்து சான்றிதழ் வழங்கினாா். அப்போது வட்டாட்சியா்கள் சண்முகம், முருகானந்தம், மண்டல துணை வட்டாட்சியா்கள் விஜயராணி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com