எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டிப் பேரணி: பாஜகவினா் 45 போ் கைது

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க மாநில அரசை வலியுறுத்தி மாட்டுவண்டிப் பேரணி நடத்திய பாஜகவினா் 45 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டிப் பேரணி: பாஜகவினா் 45 போ் கைது

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க மாநில அரசை வலியுறுத்தி மாட்டுவண்டிப் பேரணி நடத்திய பாஜகவினா் 45 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணிக்கு, பாஜக மாவட்ட விவசாய அணித் தலைவா் குஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் தங்க. வரதராஜன், மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், நகர தலைவா் மோடி.கண்ணன் உள்ளிட்டோா் 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் பேரணியாக தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனா். மணல்மேடு கடைவீதியில் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் மணல்மேடு பேருந்து நிலையம் பகுதியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட பாஜகவினா் 45 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com