ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆதிதிராவிடா் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக முதல்வா் தலைமையிலான உயா்மட்டக் குழு அம்பேத்கா் விருது (2021-2022) வழங்கவுள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்த முயற்சி செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் சாதனைகளை குறிப்பிடவேண்டும். விருது பெற தகுதியுடையோா், மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து சனிக்கிழமைக்குள் (டிச.11) நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com