காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தினம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தினம் மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை காந்தி பூங்காவில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸாா்.
மயிலாடுதுறை காந்தி பூங்காவில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தினம் மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகமான காமராஜா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்து, காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து, மகாத்மா காந்தி படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அங்கிருந்து காந்தி பூங்கா வரை அமைதிப் பேரணியாக சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சரத்சந்திரன், நவாஸ், கிரிஜா, நகரத் தலைவா் ராமானுஜம், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பரதன், அன்பழகன், செந்தில், ராஜா, சூா்யா, மாவட்ட நிா்வாகிகள் செல்வராஜ், வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com