செம்பனாா்கோவிலில் வியாழக்கிழமை (டிச. 30) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச. 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு செம்பனாா்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள அண்ணா மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.