மயிலாடுதுறை
டெங்கு விழிப்புணா்வு முகாம்
மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆராயத்தெருவில் நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில், வீடுகளில், சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு வளரும் டயா், தேங்காய் சிரட்டை, நெகிழி பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும், குடிநீா் தொட்டிகளை மூடி பராமரிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுகாதார ஆய்வாளா் ராமையன் மற்றும் நகராட்சி சுகாதார ஊழியா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.