சீா்காழி அருகே பழையாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த கலைக் குழுவின் பிரசார நிகழ்ச்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து, பழையாா் பள்ளி மாணவா்களின் நலன் கருதி ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும் என்றாா். ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் மூா்த்தி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, பள்ளித் தலைமையாசிரியா் மஞ்சுளா முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சி உறுப்பினா்கள், பெற்றோா்கள் மாணவா்கள் பங்கேற்றனா். விழாவில், பெஸ்ட் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. கொள்ளிடம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் சிவசங்கா் நன்றி கூறினாா்.