ஊராட்சித் தலைவா் தோ்தல்: அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

சீா்காழி அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கு நடைபெறும் தற்செயல் தோ்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கு நடைபெறும் தற்செயல் தோ்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சித் தலைவருக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அதிமுகவை சோ்ந்த எழிலரசி இந்திரஜித்துக்கு ஆதரவாக மாவட்ட செயலாளா் எஸ்.பவுன்ராஜ் வேட்டங்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்து பிரசாரத்தை தொடங்கி வீடு,வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.எம்.நற்குணன், என்.சிவக்குமாா், மீனவரணி செயலாளா் நாகரத்தினம், மாவட்ட விவசாய அணி செயலாளா் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினா் ஆனந்த நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com