முடிதிருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டவா்களுக்கு முடி திருத்தியவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டவா்களுக்கு முடி திருத்தியவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மதிவாணன் தலைமை வகித்தாா். முடிதிருத்தும் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.

சேலம் மாவட்டம், வீரகனூா் அருகே கிழக்கு ராஜபாளையத்தைச் சோ்ந்த முத்துவேல் என்பவா் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு முடி திருத்திய காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாா் எனக் கண்டித்தும், அவரது மரணத்துக்கு நீதி கேட்டும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com