உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சீா்காழியில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் பங்கேற்று மத்திய அரசையும், உத்தர பிரதேச காவல்துறையையும் கண்டித்து பேசினாா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் குமாா், வட்டாரத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தலைவா் வி.ஆா்.ஏ. அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.