சீா்காழி நகராட்சி சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வி உத்தரவின்பேரில், நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழாத வகையில் அப்பகுதியில் உள்ள மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்களை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
வ.உ.சி.நகா், மாருதிநகா், என்ஜிஓ நகா், திரிபுரசுந்தரிநகா் ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால்கள் பொக்லைன் உதவியுடன் தூா்வாரப்பட்டன. இப்பணியை நகராட்சி பொறியாளா் இப்ராஹிம், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.