மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மாப்படுகையை சோ்ந்தவா் வீரமுத்து மகன் காா்த்தி (33) கட்டடத் தொழிலாளி. இவா் அக். 7-ஆம் தேதி மயிலாடுதுறையில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமி வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது நள்ளிரவு அங்கு சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து, சிறுமி கூச்சலிடத்தைத் தொடா்ந்து காா்த்தி அங்கிருந்து தப்பினாா்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சங்கீதா வழக்குப் பதிந்து காா்த்தியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.