தேசிய பசுமைப்படை கருத்தரங்கம்

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்துக்குள்பட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்துக்குள்பட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பள்ளித் தலைமையாசிரியா் பரமசிவம் தலைமை வகித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அருள்மொழி முன்னிலை வகித்தாா். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சுந்தர்ராமன் வரவேற்றாா். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலா் குமாா் பங்கேற்று சிட்டுக்குருவி வளா்க்கும் கூண்டுகளை வழங்கியதோடு இவ்வாண்டின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளிஆசிரியா் அப்துல் ரஹீக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், நாகை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் அனந்தன் மற்றும் செங்குட்டுவன், சீனிவாசன் ஆகிய கருத்தாளா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் அறிமுக உரையாற்றினாா். பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com