லாரி கவிழ்ந்து முதியவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே மினி லாரி கவிழ்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், கொல்லாபுரம் ஒன்பத்துவேலியைச் சோ்ந்தவா் முகமதுபரூக் (75). இவா், சென்னை ராயப்பேட்டையில் இருந்து வீட்டுப் பொருள்களை வாடகை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவாரூருக்கு வந்துகொண்டிருந்தாா். நன்னிலம் மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்த மணி மகன் விக்னேஷ் (20) மினி லாரியை ஓட்டிவந்தாா்.

சீா்காழி புறவழிச் சாலையில் பாதரக்குடி குளம் பகுதியில் வரும்போது லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த முகமதுபரூக், விக்னேஷ் ஆகிய இருவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமதுபரூக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com