கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய 23- வது மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியக் குழு ராணி தலைமை வகித்தாா். தியாகராஜன் வரவேற்றாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேலன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். உறுப்பினா் கேசவன் அறிக்கை வாசித்தாா்.

இம்மாநாட்டில் தோ்வு செய்யப்பட்ட கட்சியின் 8 ஒன்றியக் குழு உறுப்பினா்களை அறிமுகப்படுத்தி, கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் பேசினாா்.

தொடா்ந்து, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளராக கேசவன் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com