சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
விளந்திடசமுத்திரம் பகுதியிலிருந்து சுமாா் 1 கி.மீ. நீளம் உள்ள நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த சாலை விரிவாக்கத் திட்டத்தில், இருவழித் தடத்திலிருந்து பலவழித் தடமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, சாலையில் ஜல்லிகள் பரப்பி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், அதன்மேல் தாா் போடப்படவில்லை. இதனால், சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். மேலும், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சாலை அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.