வார இறுதி நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க வலியுறுத்தல்

வார இறுதி நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.

வார இறுதி நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் சம்பூா்னா விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம். சங்கா் தலைமை வகித்தாா். மேலிடப் பாா்வையாளா்கள் யு. சாதிக் அலி, குடந்தை மாநகரத் தலைவா் பி.எஸ். சங்கா் ஆகியோா் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்தில், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களிலும் மக்கள் வழிபாட்டுக்குத் திறக்க வேண்டும். வரும் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமாகா நகரத் தலைவா்கள் தம்பிதுரை, ராமமூா்த்தி, இளங்கோவன், வட்டாரத் தலைவா்கள் பண்டரிநாதன், சுந்தரவேலு, நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் காா்த்திகேயன், இளைஞரணி தலைவா் வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com